News June 28, 2024

இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

image

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒருங்கிணைப்பு குழு மீதும், தன் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக இபிஎஸ் மீது கோவை கோர்ட்டில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் வழக்கு மீதான விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Similar News

News September 16, 2025

கோவை மாநகர காவல்துறை விழிப்புணர்வு

image

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் சமூக ஊடக டிஎம்ஸ்களில் வரும் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சமூக ஊடக டிஎம்எஸ்களில் வரும் தெரியாத இணைப்புகளை திறந்தால் தனிப்பட்ட தகவல் திருட்டும், பண இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (15.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

கோவை: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

image

கோவை மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!