News June 28, 2024
இபிஎஸ் சொல்வது உண்மை தான்: அன்புமணி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியை அசிங்கப்படுத்துவது என்று இ.பி.எஸ் சொல்வது உண்மை தான் என பாமக தலைவர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், சபாநாயகர் யாரையும் பேசவிடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், எதிர்க்கட்சியினர் பேசும் விஷயங்கள் வெளியே வருவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 27, 2025
விழுப்புரம்: வழக்கறிஞர்க்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

திண்டிவனம் அடுத்த நொளம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முனுசாமி (37) மீது, அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் (25) மற்றும் அன்பழகன் (25) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முனுசாமி அளித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News November 27, 2025
விழுப்புரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விழுப்புரம் மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News November 27, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் விதைகளுக்கு தடை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம், வீரபாண்டி பகுதிகளில் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் தலைமையில் விதை ஆய்வாளர்கள் ஜோதிமணி நடராஜன்ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில், தனியார் விதை விற்பனை நிலையங்களில் முறையான அரசு பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவுகள், கொள்முதல் பட்டியல் இல்லாத 18 விதை குவியல்களுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.


