News April 11, 2025

இன்ஸ்டா காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

image

பட்டியூர் பகுதியில் காதல் ஜோடி நேற்று (ஏப்ரல் 10) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், லத்தேரியைச் சேர்ந்த மணிகண்டனுக்கு (27) ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த இவர், கோகிலா (24) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டார் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

Similar News

News November 23, 2025

வேலூர்: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News November 23, 2025

வேலூர் கோர்ட் வளாகத்திலேயே கொலை மிரட்டல்!

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (58). நாமக்கலை சேர்ந்தவர் பிரம்மகுரு (36). இருவரும் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில், வேலூர் சத்துவாச்சாரி உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று (நவ.22) ஆஜராகினர். அப்போது விநாயகத்திற்கு பிரம்மகுரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேஜிஸ்திரேட்டிடம் விநாயகம் புகார் அளித்தார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 23, 2025

வேலூர் கோர்ட் வளாகத்திலேயே கொலை மிரட்டல்!

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (58). நாமக்கலை சேர்ந்தவர் பிரம்மகுரு (36). இருவரும் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில், வேலூர் சத்துவாச்சாரி உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று (நவ.22) ஆஜராகினர். அப்போது விநாயகத்திற்கு பிரம்மகுரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேஜிஸ்திரேட்டிடம் விநாயகம் புகார் அளித்தார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!