News March 19, 2025

இன்றைய ரோந்து காவலர்களின் பட்டியல் வெளியீடு

image

ராமநாதபுரம் மாவட்டம் இன்று (19.03.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்களுக்கு எந்த குற்றமாக இருந்தாலும் தெரிவிக்கலாம். காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News March 20, 2025

இராமநாதபுரத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

image

காற்று வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக இராம்நாடு மாவட்டத்தில் நாளை முதல் 3 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகாலை, மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு; மாவட்டத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளது என இராம்நாடு காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க.

News March 20, 2025

புத்தக திருவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்லும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் 7 வது புத்தகக் கண்காட்சி நாளை முதல் மார்ச் 30 வரை ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கவுள்ளது. காலை 10 முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும். இங்கு 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். *ஷேர் பண்ணுங்க 

News March 20, 2025

இராம்நாதபுரம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி – கலெக்டர் தகவல்

image

டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச்.25 முதல் வார நாட்களில் காலை 10 மணி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர் தங்கள் புகைப்படம், சுய விவரங்களுடன் 04567-230160 என்ற எண் (அ) 73394 06320 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர்

error: Content is protected !!