News March 24, 2025
இன்றே கடைசி நாள்: ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு விவரத்தினை மண்டல உதவி இயக்குநர் கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்-636302 என்ற முகவரிக்கு இன்று மார்ச் 24- க்குள் அனுப்ப வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
சேலம்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதளங்களில் “அதிக லாபம் கிடைக்கும் தொழில்கள்” அல்லது “பரிசு சீட்டுகள்” போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வந்தால் ஏமாற வேண்டாம் எனவும், சந்தேகம் ஏற்பட்டால் 1930 என்ற புகார் எண்ணை அழைத்து உடனடியாக புகார் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
News December 14, 2025
சேலம் மத்திய சிறையில் இரண்டு செல்போன் பறிமுதல்!

சேலம் மத்திய சிறையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை சோதனை குழுவினர் சோதனை மேற்கொண்டனர். தண்டனை கைதியின் அறையில், இரண்டு செல்போன் பேட்டரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு யார் செல்போன் கொடுத்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறையில் பெரும் பரபரப்பு நிலை வருகிறது.
News December 14, 2025
சேலத்தை சேர்ந்த மாணவர்கள் கால்பந்து போட்டியில் வெற்றி!

திண்டுக்கல்லில் ஜிடிஎன் கல்லூரியில் இன்று நடைபெற்ற அம்பேத்கர் யுனிவர்சிட்டி சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், சேலம் மத்திய சட்டக் கல்லூரி அணி இறுதி போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்றனர். பட்டத்தை வென்ற சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு அந்தக் கல்லூரி பேராசிரியர்கள் கோப்பையை வழங்கி பாராட்டினர். இவர்களுடன் உடற்கல்வி இயக்குனர் வெங்கடேஷ் உள்ளார்.


