News March 24, 2025
இன்றே கடைசி நாள்: ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு விவரத்தினை மண்டல உதவி இயக்குநர் கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்-636302 என்ற முகவரிக்கு இன்று மார்ச் 24- க்குள் அனுப்ப வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
சேலம்:திருமணம் ஆகாத ஏக்கத்தில் சோகமான முடிவு!

சேலம்: இந்திரா நகர் மேச்சேரி பிரிவு ரோட்டைச் சேர்ந்த பழ வியாபாரி லட்சுமண பெருமாள் (30), திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று தனது பழக்கடை குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 14, 2025
இன்று சேலம் வருகிறார் CM ஸ்டாலின்!

தர்மபுரியில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அயோத்தியாபட்டணம் வழியாக பாப்பிரெட்டிப்பட்டி செல்கிறார். இதனை முன்னிட்டு சேலம் மாவட்டத் தில் இன்று (14ம்தேதி) டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட க கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
News December 14, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


