News April 15, 2024
இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு விசைப் படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் திரும்பியுள்ளன. மீன் பிரியர்களின் கூட்டம் யாரும் மீன் வாங்க வராததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நேற்று கலை இழந்துள்ளது.
Similar News
News December 27, 2025
சென்னை: FACE BOOKல் ஆசை வார்த்தை கூறி ரூ.27,000 விபூதி!

சென்னையில் முகநூலில் பெண்ணுடன் பழக வைப்பதாக கூறி அமீத் அலி என்பவரிடம் வடமாநில இளைஞர் கூகுள்பே மூலமாக ரூ.27000 பெற்று ஏமாற்றி உள்ளார். அவரை தொடர்பு கொண்டபோது அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமீத் அலி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலிசார் திருடனை தேடி வருகின்றனர்.
News December 27, 2025
சென்னையில் வடகிழக்கு பருவமழை 9% குறைவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை, இயல்பை விட 2% குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இயல்பாக 793.5 மி.மீட்டர் மழை பெய்யும் நிலையில் நேற்று வரை 724.8 மி.,மீ மழையே, அதாவது 9% குறைவாகப் பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
News December 27, 2025
சென்னையில் வடகிழக்கு பருவமழை 9% குறைவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை, இயல்பை விட 2% குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இயல்பாக 793.5 மி.மீட்டர் மழை பெய்யும் நிலையில் நேற்று வரை 724.8 மி.,மீ மழையே, அதாவது 9% குறைவாகப் பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


