News April 15, 2024
இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு விசைப் படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் திரும்பியுள்ளன. மீன் பிரியர்களின் கூட்டம் யாரும் மீன் வாங்க வராததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நேற்று கலை இழந்துள்ளது.
Similar News
News November 2, 2025
சென்னை: அனைத்துக்கட்சி கூட்டம் – தவெக புறக்கணிப்பு!

சென்னை தனியார் ஹோட்டலில் இன்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருந்த நிலையில், தவெக பங்கேற்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து உங்க கருத்தை கமெண்டில் சொல்லிட்டு போங்க.
News November 2, 2025
சென்னையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News November 2, 2025
சென்னை: பிரபல யூ-டியூபருக்கு நோட்டீஸ்!

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், ரீட் அண்ட் பாலோ என்ற படத்தை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் அளித்த புகாரில், ஆதம்பாக்கம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்துள்ளனர். சம்மனை வாங்க சவுக்கு சங்கர் மறுத்ததால், நேற்று அவரது அலுவலகத்தில் போலீசார் ஒட்டி சென்றுள்ளனர். அதில், விசாரணைக்கு இன்று (நவ.2) ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


