News April 15, 2024
இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு விசைப் படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் திரும்பியுள்ளன. மீன் பிரியர்களின் கூட்டம் யாரும் மீன் வாங்க வராததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நேற்று கலை இழந்துள்ளது.
Similar News
News December 12, 2025
சென்னை – ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர் காலமானார்

சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்த ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர்நேற்று இரவு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியின்போது, 20 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளித்ததால் ஆயிரக்கணக்கான பறவைகள் அவரைத் தேடி வந்தன. இதனால் இந்திய அளவில் ‘Bird Man of Chennai’ என அழைக்கப்பட்டார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News December 12, 2025
சென்னையில் சீரியல் நடிகை தற்கொலை

சென்னை பிராட்வேவைச் சேர்ந்த சீரியல் நடிகை ராஜேஸ்வரி (39), குடும்ப பிரச்சனை காரணமாக பிபி மாத்திரை அதிகளவு உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த அவர், கணவர் சதீஷுடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News December 12, 2025
சென்னைக்கு வருது ‘டபுள் டக்கர்’ பஸ்!

சென்னையில் முதற்கட்டமாக அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.


