News April 15, 2024

இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

image

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் இன்று முதல் வரும் ஜூன் 15ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு விசைப் படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் திரும்பியுள்ளன. மீன் பிரியர்களின் கூட்டம் யாரும் மீன் வாங்க வராததால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நேற்று கலை இழந்துள்ளது. 

Similar News

News December 13, 2025

மெரினா: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன பாதை

image

மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று வரும் வகையில், தற்காலிக நவீன பாதை அமைக்கப்பட்டுள்ளது. 352 மீட்டர் நீளத்திற்கு porta mat மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, மாற்றுத்தினாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தி, கடலுக்கு அருகில் சென்று வருகின்றனர். இதைப்போலவே அனைத்து கடற்கரையிலும் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

News December 13, 2025

மெரினா: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன பாதை

image

மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று வரும் வகையில், தற்காலிக நவீன பாதை அமைக்கப்பட்டுள்ளது. 352 மீட்டர் நீளத்திற்கு porta mat மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, மாற்றுத்தினாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தி, கடலுக்கு அருகில் சென்று வருகின்றனர். இதைப்போலவே அனைத்து கடற்கரையிலும் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

News December 13, 2025

சென்னை: தட்டி கேட்ட நபருக்கு கத்தி குத்து

image

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன், இவர் நேற்று அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கிண்டல் செய்துள்ளார். இதையறிந்த ஜாபர் அலி, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், ஜாபர் அலியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து ஜாபர் அலி அளித்த புகாரின் பேரில், கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!