News January 3, 2025
இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News December 20, 2025
தேனி: மனைவி குடும்பத்தார் கணவர் வீட்டில் தகராறு

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மகாலட்சுமி. கணவன் மனைவிக்கு இடையே சில தினங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மகாலட்சுமியின் குடும்பத்தினர் விஜய் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கூடலூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு (டிச.18) பதிவு.
News December 20, 2025
பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு அழைப்பு

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் PM Kisan நிதி பெறும் 27,320 பயனாளிகளில் இதுவரை 22,561 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத 4759 பயனாளிகள் PM Kisan நிதியினை தொடர்ந்து பெற வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
News December 20, 2025
பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு அழைப்பு

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் PM Kisan நிதி பெறும் 27,320 பயனாளிகளில் இதுவரை 22,561 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத 4759 பயனாளிகள் PM Kisan நிதியினை தொடர்ந்து பெற வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


