News January 3, 2025
இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News November 26, 2025
தேனி மக்களே உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News November 26, 2025
தேனி: அக்காவின் கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள்

பெரியகுளம் ஒன்றியம் சருத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருக்கும் இவரது மைத்துனர் ஜெயராமன் என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2022.ல் ஜெயராமன், ஜெயபாலனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.25) ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
News November 26, 2025
தேனி: கொலை செய்த மூதாட்டிக்கு ஆயுள்

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் பெருமாயி (70) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2024.ல் மாரிச்செல்வம் மீது பெருமாயி பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பெருமாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து (நவ.25) தீர்ப்பு.


