News January 3, 2025
இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News November 27, 2025
தேனி: ஒரு மாத குழந்தை உயிரிழப்பு.!

கூடலூரை சேர்ந்தவர் அபிசதா. இவருக்கு 2.1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் 42 நாட்களுக்கு முன்பு 2வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.25) 2வது குழந்தையை தரையில் படுக்க வைத்து விட்டு தாய் வேலை செய்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த முதல் குழந்தை 2வது குழந்தையின் மீது தவறி விழுந்தது. இதில் படுகாயமடைந்த அந்த குழந்தை உயிரிழந்தது. இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 27, 2025
தேனி: இளைஞர் திடீரென தற்கொலை

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (30). இவரது தாயார் வீரம்மாள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது ரவீந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News November 27, 2025
பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சிறந்த பங்களிப்பை செய்த பசுமை முதன்மையாளருக்கு விருது வழங்கி தலா ரூ.1,00,000 பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது. (https://theni.nic.in), (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


