News January 3, 2025
இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

தூத்துக்குடி அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News November 15, 2025
தூத்துக்குடி: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <
News November 15, 2025
தூத்துக்குடி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

தூத்துக்குடி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News November 15, 2025
தூத்துக்குடிக்கு ரூ.136 கோடியில் புதிய மருத்துவமனை

தூத்துக்குடி மாநகராட்சியில் கூடுதலாக காமராஜ் நகரில் உள்ள மருத்துவ கல்லூரியில் புதிய சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.136.35 கோடி மதிப்பில் 7 மாடிகளுடன் 687 படுக்கை வசதி கொண்டதாக இந்த மருத்துவமனை இருக்கும் என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் முடிந்தால் தூத்துக்குடி மக்களுக்கு கூடுதல் மருத்துவமனை கிடைக்கும்.


