News August 14, 2024

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, இன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு 470 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. <>WWW.tnstc.in<<>>

Similar News

News November 20, 2025

செங்கல்பட்டு: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 20, 2025

செங்கல்பட்டு: கார் மோதியதில் போலீஸ் பரிதாப பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர், காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் அழகேசன் (45) இவர் நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் கூவத்தூர் காவல் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News November 20, 2025

செங்கல்பட்டு: ரயில்வேயில் 3,058 காலியிடங்கள் அறிவிப்பு Apply Now!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27 குள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வே வேலை தேடுவோருக்கு ஷேர்.

error: Content is protected !!