News April 5, 2025
இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மின் பகிர்மான கோட்டங்களில் இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம், இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய கோட்டங்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் முகாம்கள் நடக்க உள்ளன. சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த பிணம்! கொலையா?

கள்ளக்குறிச்சி: எலவனாசூர்கோட்டை, தளபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா (46). இவர் கடந்த 13ம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தார். தொடர்ந்து அவரது உடல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது கொலையா? இல்ல விபத்தா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 17, 2025
கள்ளக்குறிச்சியில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா?

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அடுத்த அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.18) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், மையனூர், சீர்ப்பனந்தல், எடுத்தனூர், ஜம்படை, வாணாபுரம், பகண்டை கூட்டு ரோடு, ஏந்தல், பொற்பாலம்பட்டு, மணியந்தல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி – மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
வடக்கநந்தல் பகுதியில் வாக்கு திருத்தம் பணியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் வாக்காளர் தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார், அப்போது சின்னசேலம் தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர்கள் அப்போது கலெக்டர் பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும் சரியான வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.


