News April 5, 2025
இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மின் பகிர்மான கோட்டங்களில் இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம், இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய கோட்டங்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் முகாம்கள் நடக்க உள்ளன. சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: 2 பைக் மோதி விபத்துக்குள்ளானது

கூ.கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் நம்பர் 21 ஆம் தேதி விவசாய நிலத்திற்கு செல்வதற்காக நரிஓடை தரைபாலம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த சேந்தநாடு பகுதியை சேர்ந்த மண்டிப் ஒட்டி வந்த பைக் மோதியதில் ராஜேந்திரன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மகன் ராஜேஷ் அளித்த புகாரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 22, 2025
கள்ளக்குறிச்சியில் துணிகரம் – 1 1/2 பவுன் நகை திருட்டு!

கள்ளக்குறிச்சி: கணங்கூரை சேர்ந்த பெரியசாமி மற்றும் அவரது மனைவி தனலட்சுமி இருவரும் புதிதாக கட்டி வரும் வீட்டில் உறங்கியுள்ளனர். பின் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது தனது பழைய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த 1 1/2 பவுன் நகை மற்றும் 5,000 பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 22, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-26 ஆண்டிற்கான பொதுகணக்கு குழு வரும் நவ.24-ஆம் தேதி, மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சட்டமன்ற பொதுகணக்கு குழுவினரிடம் மக்கள் கோரிக்கை மனுக்களும் அளிக்கலாம். என ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.21) அறிவித்துள்ளார்.


