News April 5, 2025
இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மின் பகிர்மான கோட்டங்களில் இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம், இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய கோட்டங்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் முகாம்கள் நடக்க உள்ளன. சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
கள்ளக்குறிச்சி: SIM CARD வைத்திருப்போர் கவனத்திற்கு!

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, <
News November 15, 2025
கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமை – 5 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: மாத்துரை சேர்ந்த ஆனந்தி- சிலம்பரசன் இருவரும் காதலித்து ஜூலை 16-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின்பு சிலம்பரசன் தனதுஅவரது தாய் ரேணுகாதேவி, தந்தை மாரியாபிள்ளை, குணாவதி, கங்காதுரை ஆகியோருடன் சேர்ந்து ஆனந்தியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் நேற்று (நவ.15) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News November 15, 2025
கள்ளக்குறிச்சி: பைக் மீது கார் மோதி விபத்து – ஒருவர் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேட்டத்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.14) கார் மற்றும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு நபர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பகுதியில் உள்ள குறுகிய பாலத்தால் தான் தொடர் விபத்து நடைபெறுகிறது என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


