News April 5, 2025

இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மின் பகிர்மான கோட்டங்களில் இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம், இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய கோட்டங்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் முகாம்கள் நடக்க உள்ளன. சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: 156 மாற்றுத்திறனாளிகள் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று(நவம்பர் 11) மாசத்துக்கு நாளிதழ் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மாவட்டம் முழுவதும் இருந்து பங்கேற்ற நிலையில் 156 மாற்றுத்திறனாளிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட காவலர்கள் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 12, 2025

கள்ளக்குறிச்சியில் இனி இதற்கு அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பென்சந்தாரர்கள், தபால் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தவாறு ஆவணங்களை சமர்ப்பித்து உயிர் வாழ் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது அருகாமையில் உள்ள இ சேவை மையத்தை அணுகி, இணையவழியாக ஒரு முறை பதிவு செய்தால் போடுமானது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சம்மர் கேம்ப்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று (நவ.12) பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஈக்கோ பிரண்ட்லி சம்மர் கேம்ப் நடைபெறுகிறது. கோமுகி அணை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குதல், சுற்றுச்சூழல்கள் பற்றிய விழிப்புணர்வு பேனர் பெயிண்டிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும்.

error: Content is protected !!