News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News November 27, 2025

செங்கல்பட்டு: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

செங்கல்பட்டு மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

செங்கல்பட்டு: பைக் திருடிய இருவர் கைது

image

குரோம்பேட்டை குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் பவுல் ஜோசப் என்பவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருட்டில் ஈடுபட்ட குரோம்பேட்டையை சேர்ந்த மதன் (20) மற்றும் அவரது நண்பர் சண்முகம் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 27, 2025

செங்கல்பட்டு: சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் டிச. 3ம் தேதி தாம்பரம் – திருவண்ணாமலை- தாம்பரம் இடையே முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி தாம்பரத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1:30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும், மறுமார்க்கமாக மாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

error: Content is protected !!