News March 15, 2025
இந்த விவசாயிகளுக்கு மட்டும் உதவித் தொகை

விருதுநகர் மாவட்டத்தில் 51,681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதித் தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22,258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்யலாம். மீதமுள்ள 29,423 விவசாயிகள் மார்ச்.31க்குள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2025
10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-40, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
News April 20, 2025
விருதுநகர்: திரைப்படங்கள் காண ஆட்சியர் அழைப்பு

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க விருதுநகர், ஸ்ரீவி,ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் ஏப்.25 முதல் மே.01 வரை சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News April 20, 2025
விருதுநகர்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. விருதுநகர் மாவட்டத்தில் 72 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <