News March 9, 2025

இந்து முன்னணியினர் 300 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அபிராமியம் பகுதியில் வழிபாடு செய்த பக்தர்கள் மீது அடக்குமுறை செய்ததை இந்து முன்னணி நிர்வாகிகள் விசாரிக்க சென்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக திருப்பூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 300 பேரை நேற்று கைது செய்தனர்.

Similar News

News March 10, 2025

பின்னலாடைக்கு வந்த சோதனை

image

“டாலர் சிட்டி” எனப்படும் திருப்பூரில் ஏற்றுமதி (ம) உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் அபார வளர்ச்சி பெற்றது. கோவிட் காலத்தில் கேரளாவில் சிறிய யூனிட் துவங்கி ஆடையாக வடிவமைத்து உள்ளுர் சந்தையில், பின்னலாடைகளை காட்டிலும் தரம் குறைவாக இருந்தாலும், ஒரு ஆடை விலை ரூ.25-க்கு விலை குறைவாக கிடைக்கிறது. இதனால், அங்கு விற்பனை சூடுபிடித்து கேரள மார்க்கெட் தொடர்பு திருப்பூருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.

News March 10, 2025

ரூ.99 லட்சம் பரிசு! போஸ்டர் வைரல்

image

மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பை கண்டுபிடித்தால், ரூ. 99 லட்சம் பரிசாக வழங்கப்படும் என பாஜக சார்பில் திருப்பூரில் ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. அப்போஸ்டரில் முதல் மொழி தமிழ், இரண்டாம்மொழி ஆங்கிலம், 3ஆவதுமொழி மாணவரகளின் விருப்பத் தேர்வு. இந்த மும்மொழிக் கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு வழங்கப்படும் என வாசகம் இடம் பிடித்திருந்தது.

News March 10, 2025

திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 09.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம், உங்களது பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!