News February 17, 2025

இந்து சமயபேரவை தலைவர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

image

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். சிவ தொண்டர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் நடைபயணமாகவும் 12 சிவாலயங்களையும் வணங்கி வருவது வழக்கம். எனவே அந்த இரண்டு தினங்களும் 12 சிவாலயங்களுக்கு செல்லும் வழிகளில் கனரக வாகனங்கள் அனுமதிக்க வேண்டாம் என்று இந்து சமயப் பேரவை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்ி.

Similar News

News July 5, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.5) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை 43.05 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை 71.65 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 13.42 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 13.51அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 482 கனஅடி, பெருஞ்சாணிக்கு 187 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News July 5, 2025

நாகர்கோவில் ரயில் 1 மணி நேரம் தாமதம்

image

திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் வரை வாரம் 4 நாட்கள் மட்டும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இரவு 9 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். ஆனால் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் ரயில் பயணிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில் ரெயில் பணிகள் சிலர் ரயில்வே மேலாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News July 5, 2025

குமரியில் 120 கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைக்க நடவடிக்கை

image

தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 120 கி.மீ தூரத்திற்கு NH 32 அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை தற்போது உள்ள சாலையில் இருந்து தனியாக அமைக்கப்படுவதால், சுமார் 600 எக்டேர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு, எந்தெந்த சர்வே எண்களில் உள்ள நிலங்கள் வழியாக சாலை அமைய உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!