News September 14, 2024
இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: அமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜிவ், இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் தேவையா என மத்திய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அறிக்கை சமர்ப்பித்து, மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரிரு மாதத்தில் வந்து விடும் என்றார்.
Similar News
News November 11, 2025
புதுச்சேரி: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News November 11, 2025
புதுவை: கண்களை தானமாக வழங்கிய குடும்பம்

புதுவை, வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (98). இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது கண்களை தானம் செய்திட, அவரது குடும்பத்தினர் முன்வந்து, அது குறித்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளை சேர்மனை தொடர்பு கொண்டுள்ளனர். அவர், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அங்கு வந்த கண் மருத்துவ குழுவினர் ஜெயலட்சுமி கண்களை தானமாக பெற்றுச் சென்றனர்.
News November 11, 2025
புதுவை: மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்!

புதுச்சேரி, உப்பளம் சோனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மா, இவரது மனைவி தமிழ்செல்வி, தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடற்கரை காந்தி சிலை அருகில் பொம்மை கடை நடத்தி வரும் தமிழ் செல்வியை, குடிபோதையில் வந்த தர்மா, கடையில் இருந்த மனைவி தமிழ் செல்வியை ஆபாசமாக பேசி, உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த புகாரின் படி, பெரிய கடை போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.


