News September 14, 2024
இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: அமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜிவ், இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் தேவையா என மத்திய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அறிக்கை சமர்ப்பித்து, மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரிரு மாதத்தில் வந்து விடும் என்றார்.
Similar News
News November 19, 2025
புதுச்சேரி: சிறப்பு மருத்துவர்கள் வருகை!

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை, நரம்பியல், இதயவியல் மற்றும் சிறுநீரகவியல் துறைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் வரும் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்து, காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.
News November 19, 2025
புதுவை: இனி சனிக்கிழமைகளிலும் பள்ளி!

புதுவை அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி. கல்வித்திட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 10, 12-ம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நடக்கவுள்ளது. அதனையொட்டி புதுவையில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இனிமேல் சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்தவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அமன் ஷர்மா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
News November 19, 2025
புதுவை: 135 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பு!

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள்
கடந்த 13.08.2025 முதல் 12.09.2025 அன்று மாலை 03.00 மணி வரை இணைய வழியில் பெறப்பட்டது. இதில் மொத்தமாக 10,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவைகள் ஆய்வு செய்யப்பட்டு 9,928 விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டன. 135 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.


