News September 14, 2024
இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: அமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜிவ், இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் தேவையா என மத்திய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அறிக்கை சமர்ப்பித்து, மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரிரு மாதத்தில் வந்து விடும் என்றார்.
Similar News
News November 13, 2025
புதுவையில் 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

புதுவை போலீசில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி போக்குவரத்து (வடக்கு) பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு சைபர் கிரைமிற்கும், அங்கு பணியாற்றிய தியாகராஜன் கடலோர காவல்படை பிரிவிற்கும், கடலோர காவல் படை பிரிவில் பணியாற்றிய வேலயன் போக்குவரத்து (வடக்கு) பிரிவிற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்பி மோகன்குமார் வெளியிட்டார்.
News November 13, 2025
புதுவை: 3 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!

புதுவை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை செய்கின்றனர். இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவித்தால், 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.2500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News November 13, 2025
புதுச்சேரியில் இளைஞர் வெட்டி படுகொலை

புதுச்சேரி மாநிலம் சாரப் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், ரெயின்போ நகர் பகுதியில் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்பு யார் எதற்காக வெட்டினார்கள் என்று கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.


