News September 14, 2024
இந்திரா சிக்னல்கள் வழியாக மேம்பாலம்: அமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜிவ், இந்திரா சிக்னல் வரை மேம்பாலம் தேவையா என மத்திய அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ராஜிவ், இந்திரா சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அறிக்கை சமர்ப்பித்து, மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஓரிரு மாதத்தில் வந்து விடும் என்றார்.
Similar News
News November 27, 2025
புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

புதுவை தொண்டமாநத்தம் வில்லியனூர் மின்பாதையில் இன்று(நவ.27) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உளவாய்க்கால், சேந்தநத்தம்பேட்டை, வள்ளுவன்பேட்டை மற்றும் உயர் மின்அழுத்த தொழிற்சாலைகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுமென புதுவை மின்துறை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
News November 27, 2025
புதுவை: தெலுங்கானா தொழிலாளி உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

தெலுங்கானாவை சேர்ந்த வெங்கடய்யா என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த குன்ன வெங்கடேஷிடம் புதுவையில் ஒப்பந்த அடிப்படையில், வேலை செய்தார். வெங்கடய்யாவுக்கு, உடல்நிலை சரியில்லாததால், அவரை, தெலுங்கானாவுக்கு அனுப்ப குன்ன வெங்கடேஷ் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றபோது, வெங்கடய்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்தார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News November 27, 2025
புதுவை: பரிசுப் பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நாள்காட்டிகள் (காலண்டர்களை) உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நமது மக்கள் கழக தலைவருமான நேரு, இன்று காந்தி வீதி – வெள்ளாள வீதி இணைப்பு பகுதியில் உள்ள கங்கை விநாயகர் கோயிலில் இருந்து கிறிஸ்துமஸ், 2026-புத்தாண்டு, பொங்கல் மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள் கூறி காலண்டர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.


