News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த<> இணையதளத்தில்<<>> வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

Similar News

News November 16, 2025

ராணிப்பேட்டையில் 172 பேர் ஆப்சென்ட்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 1,945 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 1,773 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 172 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

ராணிப்பேட்டை: பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுரேஷ்குமார் (28) என்பவர் தொடர்க்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால்- உத்தரவின் பேரில், சுரேஷ்குமார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 16, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!