News April 20, 2025

இந்தியா ராணுவத்தில் இணைய ஒரு வாய்ப்பு

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்ப உள்ளன. இதற்கு பதிவு செய்வதற்காக, காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 21.04.2025 அன்று அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News November 22, 2025

புதுவை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

புதுவை, ரெட்டியார்பாளையம் சேர்ந்த தம்பதியினர் ததேயூ ராஜ் – உஷா. இவர்களது மூத்த மகள் லியோனாமரி தெரேஸ் என்பவர் சில ஆண்டுகளாக ரத்த சோகையால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றார். மேலும் அவர் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலால் லியோனாமரி தெரேஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 22, 2025

தள்ளுவண்டி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

காரைக்கால் நகராட்சியின் PM SVANidhi திட்டத்தின் கீழ் பாரதியார் வீதி எல்லை முதல் கீழகாசாகுடி எல்லை முடிவு வரை சாலையோரத்தில் தள்ளுவண்டி கடைகள் வைத்திருப்போர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு கடைகளை நடத்த வேண்டுமென காரைக்கால் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வியாபார நேரம் முடிந்தவுடன் தங்களது தள்ளுவண்டிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News November 22, 2025

புதுச்சேரி: குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (நவ.22) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!