News April 20, 2025
இது இல்லைனா அபராதம் தான்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே. 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
விழுப்புரம்: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை!

விழுப்புரம் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
விழுப்புரம்: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மனித உடல்!

விழுப்புரம்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் (52), 7 ஆண்டுகளாக சின்னகோட்டக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் உள்ள இவரது மனைவி அச்லா, இவரை 4 நாட்களாக தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது, அலெக்சாண்டர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 21, 2025
விழுப்புரம்: அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுப்பு!

விழுப்புரம் வட்டம், பரசு ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா, சேர்ந்தனூர் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவர், புதன்கிழமை சேர்ந்தனூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த, சிவமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலரைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


