News April 20, 2025
இது இல்லைனா அபராதம் தான்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே. 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
அரசு பஸ் மோதி பட்டதாரி வாலிபர் பலி

திண்டிவனம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால்(23). இவர், திண்டிவனத்தில் உள்ள பேக்கரியில் பகுதி நேர பணி செய்து வந்தார். நேற்று நான்கு முனை சந்திப்பில் பைக்கில் சென்றபோது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 20, 2025
விழுப்புரம் மாவட்ட வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க

திருவெண்ணெய்நல்லூர்-04153-290893, கண்டாச்சிபுரம்-04153-231666, மேல்மலையனூர்-9942248808, 04145-234209, மரக்காணம்-9445461915, 04147-239449, விக்கிரவாண்டி-9445461837, 04146-233132, வட்டாட்சியர், வானூர்-9445000526, 0413-2677391, விழுப்புரம்-9445000525, 04146-222554, செஞ்சி-9445000524, 04145-222007, திண்டிவனம்-9445000523, 04147-222090. *
News April 20, 2025
விழுப்புரம்: கடன் தொல்லை நீங்கி செழிப்பாக வேண்டுமா?

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் காப்பவர் குபேரன். இவ்விருவரும் அருள்பாலிக்கும் மகாலட்சுமி குபேரர் கோவில், விழுப்புரம் அருகே திருநகரில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் பௌர்ணமி, அமாவாசையில் மகாலட்சுமி மற்றும் குபேரனுக்கு பூஜை செய்தால் போதும், உங்கள் வாழ்வில் கடன் நீங்கி செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம். *நண்பர்களுக்கும் கடனை தீர்க்கும் லட்சுமி குபேரரை தெரியப்படுத்துங்கள்*