News April 14, 2024
இட்லி சுட்டு வாக்கு சேகரிப்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி பகுதியில் அவரது மனைவி சங்கீதா கதிர்ஆனந்த் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், சிற்றுண்டி கடையில் இட்லி சுட்டு வாக்குகள் சேகரித்தார்.
Similar News
News November 11, 2025
வேலூர்: காதல் தோல்வியால் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(23). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆனதால் ஜெகநாதன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவ.10) அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 11, 2025
வேலூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
வேலூர்: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

வேலூரில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.


