News May 7, 2025
இடப்பிரச்சனையில் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
கிருஷ்ணராயபுரம் அருகே வசமாக சிக்கிய நபர் கைது

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மணவாசி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சரவணன் 45. இவர் மணவாசி சுடுகாடு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் மது விற்ற சரவணன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News November 15, 2025
கரூரில் பெண் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரை சேர்ந்தவர் முரளி மனைவி சுதா 26. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அருகில் குடியிருக்கும் கோமதி, மகாலட்சுமி, முருகானந்தம், அம்சவல்லி ஆகிய 4 பேரும் எச்சில் துப்பி தகாத வார்த்தையால் திட்டி கையால் அடித்ததாக சுதா அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசரணை
News November 15, 2025
கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம், இன்று (15.11.2025 ) அரவக்குறிச்சி தொகுதி, புன்னம் சத்திரம், அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாமநடைபெறுகிறது. இதில் நரம்பு, இதயம், கை, கால் போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


