News April 2, 2025

இங்கு மாம்பழம் தந்தால் கடன் தீரும்… !

image

சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News April 10, 2025

கடித்து குதறிய தெரு நாய்கள்: 20 பேர் காயம் 

image

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாய் கடியால் காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News April 10, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

image

பண்டிகைகள், விடுமுறையை முன்னிட்டு, ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் வரும் மே 04- ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமையில் தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் போத்தனூரில் இருந்து தாம்பரத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (06185/06186) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News April 10, 2025

சேலத்தில்  கேஸ் சிலிண்டர் விலை ரூ.886.50 ஆக உயர்வு!

image

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 886.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

error: Content is protected !!