News October 25, 2024
ஆவின் லாரியும் கலவை லாரியும் மோதி விபத்து

அண்ணாநகர் பகுதி புதிய ஆவடி சாலையில், இன்று அதிகாலை ஆவின் லாரியும் கலவை லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆவின் லாரி ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Similar News
News December 17, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், SSC, RRB, TNPSC, TNUSRB, போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மின்ட் ஐடிஐ-யில் வரும் ஜனவரியில் நடை பெற உள்ளது. இதில் சேர விரும்புவோர் https://forms.gle/QyWHC7dUAk9iYkFt5 கூகுள் படிவத்தில் தங்களது விவரத்தினை பூர்த்தி செய்யுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
BREAKING: செம்பரப்பக்கம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம்

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாகம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குறிப்பாக குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ஏரியை ஒட்டி உள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குக்குள் நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், வழக்கத்திற்கு மாறாக ஊருக்குள் வெள்ளம் புகுந்ததாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


