News October 25, 2024
ஆவின் லாரியும் கலவை லாரியும் மோதி விபத்து

அண்ணாநகர் பகுதி புதிய ஆவடி சாலையில், இன்று அதிகாலை ஆவின் லாரியும் கலவை லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆவின் லாரி ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Similar News
News December 17, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
ஜனவரியில் திறக்கப்படும் பூந்தமல்லி-போரூர் மெட்ரோ!

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி – போரூர் இடையேயான 9 கி.மீ பாதையில் 2026 ஜனவரியில் ரயில் சேவை தொடங்க உள்ளது. நெரிசல் நேரங்களில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். இதற்காக 13 மூன்று பெட்டி ரயில்கள் பயன்படுத்தப்படும் எனவும், இவை ஓட்டுநர் இல்லா தொழில்நுட்பம் கொண்டவை என்றாலும், ஆரம்பத்தில் ஓட்டுநர்களுடனே இயங்கும் என CMRL அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 16, 2025
சென்னை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


