News August 6, 2024
ஆவின் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும்: அமைச்சர்

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களுக்கு தேவையான ஆவின் உற்பத்தி பொருட்களை தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Similar News
News December 21, 2025
சென்னை-நெல்லை வந்தே பாரத் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் இணை அமைச்சர் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
News December 21, 2025
சென்னை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை..

சென்னையில் பயிற்சிக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கார்த்திக் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிசியோதெரபி படிக்கும் மாணவி ஒருவர் INTERNSHIP-க்காக தனியார் பிசியோதெரபி மையத்தில் சேர்ந்துள்ளார். அப்போது பிசியோதெரபி மைய உரிமையாளர் கார்த்திக், அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
News December 21, 2025
சென்னை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

சென்னை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!


