News April 17, 2025

ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருவள்ளூர், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனையில் இறங்கினர். மேலும், மின்னஞ்சல் எதிரொலியால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்கு வருகிறது. *சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகியுள்ளது.

Similar News

News November 21, 2025

அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவத்தில் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் (நவ-22,23) ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி மையங்கள் செயல்பட உள்ளது என அறிவித்துள்ளார்.

News November 21, 2025

திருவள்ளூர்: தென்கிழக்கு ரயில்வேயில் 1785 காலியிடங்கள்!

image

ருவள்ளூர் மாவட்ட மக்களே..,தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள 1785 அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. தனியாக தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க டிச.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 21, 2025

திருவள்ளூர்: வட மாநில தொழிலாளி பரிதாப பலி!

image

கும்மிடிப்பூண்டி அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலையில் கட்டட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தான் கான்(27) என்பவர் நேற்று(நவ.20) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!