News April 17, 2025

ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருவள்ளூர், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனையில் இறங்கினர். மேலும், மின்னஞ்சல் எதிரொலியால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்கு வருகிறது. *சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகியுள்ளது.

Similar News

News December 15, 2025

திருவள்ளூர்: நைஜீரியாவைச் சேர்ந்தவர் கைது!

image

திருவள்ளூர் எஸ்.பி.க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிறப்பு படை போலீசார் நாமக்கல் பகுதியில் பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இப்பதான் மைக்கேல்(44) என்பவரை கடந்த டிச.13ஆம் தேதி கைது செய்து, அவரிடமிருந்து ரூ.25,000 மதிப்புள்ள 5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, மணவாளநகர் போலீசாரிடம் நேற்று(டிச.14) ஒப்படைத்தனர்.

News December 15, 2025

திருவள்ளூருக்கு இ-பஸ் வரப்போகுது!

image

திருவள்ளூர்: சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மாநகர மின்சார பேருந்து இயக்குவதற்காக, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மின்சார தாழ்தள ‘ஏசி’ பேருந்துகளை, திருவள்ளூர் நகருக்கு இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. வழக்கமான பேருந்துகளை விட, மின்சார பேருந்துகள் நீளம் மற்றும் அகலமாக இருப்பதால், சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

News December 15, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.14) இரவு 10 மணி முதல் நாளை (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!