News December 6, 2024
ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் கிடங்குகளை பார்வையிட்டு திரவ உயிர் உரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கினார். நெல் சாகுபடி பணிகளை பணிகளை, வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ் உடன் சென்று ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
Similar News
News December 20, 2025
தூத்துக்குடி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
தூத்துக்குடியில் இளைஞர் மீது குண்டாஸ்

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18.11.2025 அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மாமுனீஸ்வரன் (21) கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் போலீசார் தர்மா முனீஸ்வரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 20, 2025
தூத்துக்குடி: கார் மோதி பெண் பரிதாப பலி

ஓட்டப்பிடாரம் அருகே சோழபுரத்தை சேர்ந்த சுடலை என்பவரின் மனைவி மருதக்கனி (46). இவர் நேற்று தேசிய நெடுஞ்சாலை பகுதியில் புற்களை அறுத்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மருதக்கனி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மருதக்கனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதில், கார் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த ரமேஷ்குமாரை (38) போலீசார் கைது செய்தனர்.


