News December 6, 2024
ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் கிடங்குகளை பார்வையிட்டு திரவ உயிர் உரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கினார். நெல் சாகுபடி பணிகளை பணிகளை, வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ் உடன் சென்று ஆய்வு செய்து தேவையான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
Similar News
News November 12, 2025
பொட்டலூரணியில் 548-வது நாளாக தொடரும் போராட்டம்..

பொட்டலூரணியை சுற்றியுள்ள மூன்று தனியார் கழிவு மீன் ஆலைகளை உடனடியாக மூடக்கோரியும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும் இன்று (12.11.2025) தொடர் போராட்டத்தின் 548-ஆம் நாள் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது..
தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொட்டலூரணி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..
News November 12, 2025
BREAKING தூத்துக்குடி: 11 மாத குழந்தை பலி

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில் உள்ள செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த் ராதா & மகேஸ்வரி தம்பதிகள். இன்று இவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த இவர்களின் 11 மாத பெண் குழந்தை பலியானார். தாய் ராதா மகேஸ்வரி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 12, 2025
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு

தொடக்க கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகளுக்கு மாவட்ட வாரியாக அரசு பரிசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தூத்துக்குடி மாவட்ட சிறந்த பள்ளியாக தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி பள்ளி, டுவிபுரம் திருமண்டல நடுநிலைப்பள்ளி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


