News September 15, 2024

ஆழ்வார்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

image

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மருத்துவமனை, பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரம கல்யாணி மருத்துவமனையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

Similar News

News November 12, 2025

தென்காசி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

தென்காசி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

சங்கரன்கோவில் வழியாக செல்லும் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

வண்டி எண் (07111- 07112) நான்டேட் – கொல்லம் சிறப்பு ரயில் கீழ்க்கண்ட தேதிகளில் இயங்கும்: 20.11.2025 முதல் 15.01.26 ஒவ்வொரு வியாழன் தோறும் ஹைதராபாத்தில் இருந்து புறப்படும். 22.11.25 முதல் 17.01.26 வரை ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொல்லம் ஜங்ஷனில் இருந்து புறப்படும். வழித்தடம் : நான்டேட் , கச்சிகுடா , கடப்பா , திருப்பதி , வேலூர் , திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சங்கரன்கோவில் வழியாக கொல்லம் செல்லும்.

News November 12, 2025

ஆலங்குளம்: குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு!

image

ஆலங்குளம் அருகே சண்முகபுரம் மேற்கு தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் மணிமுத்து வயது 75 மனைவி, நான்கு மகன்கள் உள்ளனர். மணிமுத்துவை காணவில்லை என்று நேற்று முன்தினம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய நிலையில் நேற்று வீட்டிற்கு அருகே இருக்கும் குளத்தில் மணிமுத்து உடல் இறந்தநிலையில் மிதந்துள்ளது. உடலை மீட்டு போலீசார் விசாரணை.

error: Content is protected !!