News September 15, 2024
ஆழ்வார்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மருத்துவமனை, பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரம கல்யாணி மருத்துவமனையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News October 17, 2025
தென்காசி வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வருகை புரிந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்
News October 17, 2025
BREAKING: தென்காசியில் வெறிநாய் கடித்ததில் ஒருவர் பலி

தென்காசி, சாம்பவர்வடகரை பேரூராட்சி 12வது வார்டு வேலாயுதபுரம் ரோட்டில் குடியிருந்து வரும் காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரை கடந்த 20 தினங்களுக்கு முன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை வெறி நாய் கடித்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அரசு மருத்துவமனையில் காலை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.
News October 17, 2025
தென்காசி நகரப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு – எஸ்பி

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட ரத வீதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்ட நெரிசலின் போது கவனமாக செல்ல வேண்டும் என்று மாவட்ட எஸ்பி அரவிந்த் தெரிவித்துள்ளார்.