News October 25, 2024
ஆலத்தூரில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பலி

ஆலத்தூரை சேர்ந்த சண்முகநாதன் (வயது 27) விவசாயி இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் சண்முகநாதன் கீழே கிடந்துள்ளார்.திட்டச்சேரி போலீசார் அவர் உடலை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.திருமணம் ஆகி 8 மாதங்களே ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
Similar News
News November 17, 2025
நாகை மாவட்டத்தில் 37 செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கோடியக்கரையில் 11.7 செ.மீ, வேதாரண்யம் – 7.1 செ.மீ, தலைஞாயிறு – 6.1 செ.மீ, திருப்பூண்டி – 3.9 செ.மீ, வேளாங்கண்ணி – 3.4 செ.மீ, நாகை – 3.1 செ.மீ, திருக்குவளை – 1.8 செ.மீ
என நாகை மாவட்டத்தில் மொத்தமாக 37 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் (நவ.17) நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
நாகையில் இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நாகை EGS பிள்ளை கல்லூரி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நாளை (நவ.18) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சர்க்கரை, ரத்த கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி, வயிற்றுப்புண், தோல் வியாதிகள், ஆஸ்துமா, சைனஸ், முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


