News October 25, 2024

ஆலத்தூரில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பலி

image

ஆலத்தூரை சேர்ந்த சண்முகநாதன் (வயது 27) விவசாயி இவர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் சண்முகநாதன் கீழே கிடந்துள்ளார்.திட்டச்சேரி போலீசார் அவர் உடலை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.திருமணம் ஆகி 8 மாதங்களே ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Similar News

News January 2, 2026

நாகை: குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

image

கீழையூா் அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (35)-ரம்யா (30) தம்பதி மகன் தேவா (3). ஐயப்பன் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் ரம்யா மகனை வளா்த்து வந்தாா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகிலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துபோனது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ரம்யா புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News January 2, 2026

நாகை: ரூ.2.5 கோடிக்கு விற்பனை; புதிய உச்சம்!

image

பண்டிகை காலங்களில் வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் புத்தாண்டையொட்டி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 58 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ஒரே நாளில் மொத்தம் ரூ.2.32 கோடி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.01) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.02) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!