News August 16, 2024

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

image

நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சக நண்பர்களோடு பள்ளி அருகே உள்ள மகா ராஜபுரம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆற்றில் நீரின் சுழற்சியில் சிக்கினார். பின்னர் மாணவனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

Similar News

News December 5, 2025

திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டோக்கள் ஓடாது

image

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோக்கள் இயக்குவதை தடை செய்யக்கோரி, நாளை (டிச.06) காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பாக ஆட்டோக்கள் ஓடாது என திருவாரூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

News December 5, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

திருவாரூர் துணை மின் நிலையம் மற்றும் கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (டிச.06) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருவாரூர், கடைவீதி, விளமல், மாவூர், மாங்குடி, அலிவலம், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் இரவு நேர கூட்டங்களை தடுக்க காவல்துறையின் உதவிக்கு எங்களது இரவு வந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!