News August 16, 2024
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சக நண்பர்களோடு பள்ளி அருகே உள்ள மகா ராஜபுரம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆற்றில் நீரின் சுழற்சியில் சிக்கினார். பின்னர் மாணவனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.
Similar News
News November 17, 2025
திருவாரூர்: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை மின்மயமாக்கல் பணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. அகல ரயில் பாதையில் மின்மய மக்கள் குறித்து முக்கிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 30 அன்று இந்த மின் பாதையில் 25 ஆயிரம் ஓல்டு ஏசி மின்சாரம் பாய்ச்சப்படும் எனவும், இந்த கம்பிகளை அணுகுவதோ, தொடுவதோ ஆபத்தை விளைவிக்கும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.
News November 17, 2025
திருவாரூர்: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
திருவாரூரில் மழையா? இதை மறக்காதீங்க!

திருவாரூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கப்படும்! SHARE


