News April 27, 2025
ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

துறையூர் அருகே பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த பாலகுமார் மகன் தர்ஷன் (13). நேற்று பெற்றோருடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது, நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க தர்ஷன் இறங்கியுள்ளார். அப்போது மூழ்கத் தொடங்கிய அவரை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
Similar News
News October 17, 2025
திருச்சி: தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் வீர மணிகண்டன் (32). லோடுமேன் ஆக பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனது தாய் இறந்ததால், மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வீர மணிகண்டன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 17, 2025
திருச்சி: தமிழ் அறிஞர்களுக்கான அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tamilvalarchithurai.org/agavai/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் வரும் நவ.17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
திருச்சி: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <