News April 27, 2025
ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

துறையூர் அருகே பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த பாலகுமார் மகன் தர்ஷன் (13). நேற்று பெற்றோருடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது, நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க தர்ஷன் இறங்கியுள்ளார். அப்போது மூழ்கத் தொடங்கிய அவரை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.
Similar News
News December 17, 2025
திருச்சி: டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்பட்சம் 40
4. சம்பளம்: ரூ.16,338 – ரூ.29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
திருச்சி: 2 நாட்களுக்கு ரயில் ரத்து!

காரைக்குடி – திருச்சி பயணிகள் ரயில் 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காரைக்குடி – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயிலானது வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காரைக்குடியில் இருந்து குமாரமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
திருச்சி: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


