News April 13, 2025
ஆற்காட்டில் ரூ 35 கோடி மதிப்பில் புறவழி சாலை

ஆற்காட்டில் ரூ.35 கோடியில் புறவழிச்சாலை (பைபாஸ்) அமைக்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிதாக 3.46 கிமீ தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலை துறை சாா்பில் ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டது. சாலைப் பணிகள் தொடக்க விழா வேப்பூா் ஊராட்சி பொன்னியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
Similar News
News September 16, 2025
ராணிப்பேட்டையில் ஒரு அதிசய கோயில்

ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் உள்ளது. இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்த தம்பதிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 16, 2025
ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News September 16, 2025
ராணிப்பேட்டையில் வெளுத்து வாங்க போகும் கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.