News April 13, 2025

ஆற்காட்டில் ரூ 35 கோடி மதிப்பில் புறவழி சாலை

image

ஆற்காட்டில் ரூ.35 கோடியில் புறவழிச்சாலை (பைபாஸ்) அமைக்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிதாக 3.46 கிமீ தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலை துறை சாா்பில் ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டது. சாலைப் பணிகள் தொடக்க விழா வேப்பூா் ஊராட்சி பொன்னியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

Similar News

News April 19, 2025

ராணிப்பேட்டை: கவலைகள் மறைய இங்கு போங்க

image

ஒரு எரிமலை வெடித்த பின்னர் அந்த எரிமலைக் குழம்புகளே சிவலிங்கமாகவும் நந்தியாகவும் மாறிய மலைதான் ராணிப்பேட்டை, லாலாப்பேட்டை அருகேயுள்ள காஞ்சனகிரி. ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம் மலையிலுள்ள பாறையைத் தட்டிப் பார்த்தால் வெண்கல மணிச் சத்தம் வெளிப்பட்டு எதிரொலிக்கும். இந்த கோயிலுக்கு வந்தால் கஷ்டங்கள் தீர்ந்து கவலைகள் மறையும் என்பது நம்பிக்கை. கவலையில் இருக்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 19, 2025

ராணிப்பேட்டை: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். அத்தகையான இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்துகொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க

News April 19, 2025

கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டையில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் 15 தேதி வரை நடைபெறுகிறது.  இந்த முகாம் பற்றி மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜே.யூ சந்திரகலா தெரிவித்தார்.

error: Content is protected !!