News August 17, 2024
ஆற்காடு சுரேஷ் நினைவஞ்சலி: போலீசார் தீவிர கண்காணிப்பு

மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளை கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளன்று, அவரது கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக கைதான குற்றாவளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இரு தரப்பினரும் பெரம்பூர் மற்றும் புளியம்தோப்பு பகுதிகளில் வசிப்பதால், அசம்பாவிதம் நடக்காதவாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
திருவள்ளூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
திருவள்ளூர் மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
திருவள்ளூர்: SIR ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதி!

ஆவடி மாநகராட்சி சார்பில் நடைபெறும் Special Intensive Revision–2026 தொடர்பாக வாக்காளர் விவரங்களை புதுப்பிக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 2002/2005 பிறந்த வாக்காளர்கள் தங்கள் தகவல்களை https://erolls.tn.gov.in/electoralsearch/ மூலம் சரிபார்க்கலாம் என்றும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஆன்லைனில் www.voters.eci.gov.in வழியாகவும் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


