News August 17, 2024

ஆற்காடு சுரேஷ் நினைவஞ்சலி: போலீசார் தீவிர கண்காணிப்பு

image

மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளை கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளன்று, அவரது கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக கைதான குற்றாவளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இரு தரப்பினரும் பெரம்பூர் மற்றும் புளியம்தோப்பு பகுதிகளில் வசிப்பதால், அசம்பாவிதம் நடக்காதவாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 21, 2025

அம்பத்தூர்: தற்கொலை வழக்கில் மருத்துவர் கைது

image

அம்பத்தூரைச் சேர்ந்த மருத்துவர் அசாருதீன், பெண் மருத்துவரான சமீரா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமீரா தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சமீராவின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ விசாரணையில் இது உறுதியான நிலையில், தலைமறைவாக இருந்த அசாருதீனை நேற்று கைது செய்தனர்.

News November 21, 2025

திருவள்ளூர்: 206 கிலோ குட்கா பறிமுதல்

image

திருவள்ளூர்: மாதவரம் ரவுண்டானா அருகே இன்று(நவ.21) அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து காரில் சென்று சோதனை நடத்திய போது மூட்டை மூட்டையாக 206 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 21, 2025

திருவள்ளூர்: கரண்ட் பில் குறைக்க எளிய வழி! CLICK NOW

image

திருவள்ளூரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

error: Content is protected !!