News October 24, 2024
ஆற்காடு அருகே 22 சவரன் நகை பறிமுதல்

ஆற்காடு டவுன் போலீசார் நேற்று இரவு அண்ணா சிலை அருகில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை நிறுத்தி விசாரித்ததில் மேல்விஷாரத்தைச் சேர்ந்த நவீன், ஐயப்பன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் பல்வேறு இடங்களில் திருடியது தெரிந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News December 27, 2025
SIR பணிகள்: திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் 2025-ன் படி, ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதின் அடிப்படையில், தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத பெயர்களை சேர்க்கும், நீக்கும் பணிகள் வாக்குச்சாவடி மையங்களில் டிசம்பர் 27, 28 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே இந்தப் பணிகளில் திமுக நிர்வாகிகள் முழுவதுமாக ஈடுபட வேண்டும் என அமைச்சர் காந்தி அறியுறுத்தியுள்ளார்.
News December 27, 2025
ராணிப்பேட்டை: மயங்கி விழுந்த தொழிலாளி மர்ம சாவு!

ராணிப்பேட்டை, கத்தியவாடி சாலையை சேர்ந்தவர் கே. ராஜா (வயது 56). அப்பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவர், நேற்று (டிச.27) அங்குள்ள தோல் கழிவு தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தார். இதனால் உறவினர்கள் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று தொழிற்சாலை நுழைவு வாயில் முன் ராஜாவின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News December 27, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச-26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


