News August 17, 2024
ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் மாத்திர் மந்திரியை, ‘வியூ பாயிண்ட்’ பகுதியில் இருந்து பார்வையிட்டனர்.
Similar News
News December 10, 2025
புதுவை: விவசாய கூலி தொழிலாளி திடீர் இறப்பு

பாகூர், அரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (63). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அரங்கனூர் ஏறமுடி அய்யனார் கோயில் அருகே, வயலில் பூச்சி மருந்து அடித்தபோது, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகூர் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
News December 10, 2025
புதுவை: விவசாய கூலி தொழிலாளி திடீர் இறப்பு

பாகூர், அரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (63). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அரங்கனூர் ஏறமுடி அய்யனார் கோயில் அருகே, வயலில் பூச்சி மருந்து அடித்தபோது, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகூர் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
News December 9, 2025
காரைக்காலில் கார்னிவல் விழா குறித்து ஆலோசனை

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கார்னிவல்- 2026 நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன், ஆட்சியர் ரவி பிரகாஷ் கலந்து கொண்டனர். மேலும் கார்னிவல் விழா ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மற்றும் மலர் கண்காட்சி ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.


