News August 17, 2024

ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் மாத்திர் மந்திரியை, ‘வியூ பாயிண்ட்’ பகுதியில் இருந்து பார்வையிட்டனர்.

Similar News

News October 18, 2025

புதுச்சேரி விடுதலை விழா குறித்து ஆலோசனை

image

புதுச்சேரி விடுதலை தின விழா வரும் 01.11.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அரசுச் செயலர் முகமது அஹ்சன் அமித் தலைமையில், தலைமைச் செயலக கருத்தரங்க கூடத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலை தின விழாவை சிறப்பாக நடத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

News October 18, 2025

ஆற்றங்கரையோர மங்களுக்கு எச்சரிக்கை

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், வீடூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படுவதால், சங்கராபரணி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதிகளான மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், நோணாங்குப்பம் ஆகிய கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 18, 2025

புதுச்சேரியில் அதிமுக ஆண்டு விழா கொண்டாட்டம்

image

அதிமுகவின் 54வது உதய நாள் விழா உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. எம்ஜிஆர் சிலை மற்றும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

error: Content is protected !!