News August 17, 2024
ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் மாத்திர் மந்திரியை, ‘வியூ பாயிண்ட்’ பகுதியில் இருந்து பார்வையிட்டனர்.
Similar News
News September 16, 2025
புதுச்சேரி: தனியார் மழலையர் பள்ளியில் தீ விபத்து

புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே தனியார் மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் புதுச்சேரியை சேர்ந்த 10 ஆசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். தீடிரென சுவிட்சு பாக்ஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது, இதில் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், உடனே தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.
News September 16, 2025
புதுச்சேரி இளைஞர்களே இனி கவலையே வேண்டாம்!

புதுச்சேரி, லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் போட்டோ, வீடியோ கிராபி பயிற்சிக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. 19ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பயிற்சியில் சேர, 8ஆம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். 31 நாட்கள் பயிற்சியில் உணவு இலவசம்.மேலும், 8870497520, 0413-2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க
News September 16, 2025
புதுச்சேரி: மின் இணைப்பு துண்டிக்கப்படும், எச்சரிக்கை!

மின்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வில்லியனுார், பூமியான்பேட், லாஸ்பேட், கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனுார், காட்டேரிக்குப்பம் ஆகிய அலுவலகத்திற்கு உட்பட மின் நுகர்வோர்கள், தங்களுடைய மின் கட்டண பாக்கியை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT