News August 17, 2024
ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் மாத்திர் மந்திரியை, ‘வியூ பாயிண்ட்’ பகுதியில் இருந்து பார்வையிட்டனர்.
Similar News
News November 26, 2025
புதுச்சேரி: தவெகவில் இணையும் முன்னாள் பாஜக தலைவர்

புதுச்சேரி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சுவாமிநாதன் எம்எல்ஏ மற்றும் காரைக்கால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனா ஆகியோர், நாளை காலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் இணைகின்றனர். மேலும் பலர் அடுத்தடுத்து தவெகாவில் சேர உள்ளதாகவும் தகவல்.
News November 26, 2025
புதுச்சேரி: இலவச பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் தொகுதி முருகேசன் நகரில், வீடற்ற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அல்லது இலவச மனை பட்டா வழங்கிடக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில் சந்தித்து மனு அளித்தனர். புதுப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக வசிக்கின்ற வீடற்ற பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் Dr. சரத் சவுகான், இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசிக்க தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அரசுச் செயலர் விக்ராந்த் ராஜா முகவுரையை தமிழில் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.


