News August 17, 2024
ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் மாத்திர் மந்திரியை, ‘வியூ பாயிண்ட்’ பகுதியில் இருந்து பார்வையிட்டனர்.
Similar News
News December 12, 2025
புதுவை: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

புதுவை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே <
News December 12, 2025
புதுவை: மானிய விலையில் வான்கோழிகள்

கால்நடைத்துறை இயக்குநர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறையின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைகளில் வான்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், 6 வார வான்கோழிகள் 50 சதவீத மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. கால்நடை மருந்துவமனையை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 12, 2025
காரைக்காலில்: காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

காரைக்காலில் அனைத்து பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் கலந்தாய்வு கூட்டம், நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் கடைபிடிக்கவேண்டிய சாலை விதிகளை பற்றியும், பயணிகளின் பாதுகாப்பு பற்றியும், விபத்து நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பற்றி போலீசார் விரிவாக எடுத்துரைத்தனர்.


