News April 29, 2025

ஆரணி அருகே பட்டா கத்தியுடன் ரீல்ஸ்

image

ஆரணி அடுத்த நெசல் சாலையில் நேமிக்குமார்(20) என்ற இளைஞர் பட்டா கத்தியுடன் செல்போனில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். ரீலிஸ் மோகத்தில் வெத்து சீன் போட்ட நேமிக்குமார் தற்போது வேலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். 

Similar News

News April 29, 2025

தி.மலை கோயிலில் திரைப்பட இயக்குனர் பாலா சாமி தரிசனம்

image

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (ஏப்.29) இன்று பிரபல திரைப்பட இயக்குனர் பாலா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

News April 29, 2025

தி.மலையில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

image

திருவண்ணாமலை அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து நாளை(ஏப்.29) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி

image

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு வருகிற 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பஙளை திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் tamilvalarchitvm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!