News August 26, 2024

ஆரணியில் 1000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

image

ஆரணியில் அரிமா சங்கம் சாா்பில் 1000 மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டிய சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் இந்த பரத நாட்டிய சாதனை நிகழ்ச்சியில் ஆரணி, திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம் பதிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்றனா். இதில் பஞ்ச பூதங்கள், தண்ணீா் தூய்மை செய்தல், பஞ்சாக்ர நிருத்தியாஞ்சலி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Similar News

News November 25, 2025

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை உடனடியாக விரைவாக முடிக்குமாறு பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

News November 25, 2025

தி.மலை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு <<>>க்ளிக் செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News November 25, 2025

தி.மலை: தீபத் திருவிழா இரண்டாம் நாள் உற்சவம்

image

தி.மலை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2025, இரண்டாம் நாள் காலை இன்று (25/11/2025) ஶ்ரீ விநாயகர் மற்றும் ஶ்ரீ சந்திரசேகரர் சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையொட்டி, சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!