News April 18, 2025
ஆயுள் பலம் தரும் ராசிபுரம் கோயில்!

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!
Similar News
News November 22, 2025
நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 22, 2025
ராசிபுரம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்!

ராசிபுரம் அருகே மெட்டாலா கும்பக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி. கடைக்கு சென்றவர் வீடு திரும்பாமல் போனதால், தாத்தா நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், வடுகம் நடுவீதியைச் சேர்ந்த விஷ்வா (19) ஆசைவார்த்தைகளால் மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மகளிர் போலீசார் மாணவியை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தும், விஷ்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News November 22, 2025
நாமக்கல் ஆட்சியருக்கு நீர் மேலாண்மைக்கான விருது!

இந்திய குடியரசு தலைவரின் தலைமையில் கடந்த (நவ.18) அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 6-வது தேசிய நீர் விருதுகள் மற்றும் ஜல் சஞ்சய் ஜன் பாகீரதி 1.0 விருது வழங்கும் விழாவில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி-க்கு “JSJB” முன்முயற்சியின் கீழ் 7057 நீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக ரூபாய் 25 லட்சம் ரொக்க ஊக்கத்தொகை மற்றும் வகை 3-ல் JSJB 1.0 விருது வழங்கப்பட்டது.


