News April 22, 2025

ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு பிரிவு

image

நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் கொண்ட பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு 11 கோடியே 40 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாகர்கோவிலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 2, 2025

குமரி: இந்த APP உங்க போனில் இருக்கா.? அரசு உத்தரவு!

image

மத்திய அரசு அண்மையில் ஒரு மிக முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதில், இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் ‘<>சஞ்சார் சாத்தி<<>>’ ஆப் கட்டாயம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆப் நமது போனில் இருந்தால், நமது போன் தொலைந்து விட்டாலோ, திருடுபோனாலோ எளிதில் கண்டுப்பிடித்து விடலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 2, 2025

குமரி: வட்டியுடன் ரூ.40 லட்சத்தை வழங்க கோர்ட் உத்தரவு

image

என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் பர்ணபாஸ். இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் இறந்துவிட்டார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு வைத்திருந்தார். அவரது மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்தில் அவரது மனைவி சமர்ப்பித்த நிலையில் அதனை வழங்க நிறுவனம் மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனம் 40 லட்சத்தை 6.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது.

News December 2, 2025

குமரி: பட்டாசு கடை வைக்க போறீங்களா? கலெக்டர் அழைப்பு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை ஒட்டி குமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம். வருகிற 10ம் தேதிக்கு முன்னதாக இ-சேவை மையங்களில் அதற்குரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இடத்தின் வரைபடம் பட்டா போன்றவைகள் அதில் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!