News January 2, 2025

ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

image

மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ரோந்து சென்றபோது வாளுடன் பதுங்கி இருந் விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த பழனிக்குமார் (32)என்பவரை கைது செய்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் யாரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 16, 2025

JUSTIN: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விசாரணைக்கு தடையில்லை

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதிக்க மறுத்துவிட்டது. தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும், வழக்கு விசாரணை நாளையும் தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

News December 16, 2025

மதுரை: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

image

மதுரை மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்<>கு க்ளிக்<<>> செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

சாக்கடையில் மூழ்கி பலியான மூதாட்டி

image

மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் இந்திராவதி(75) கணவனை இழந்த இவர் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு வீட்டில் தனித்து வசித்து வந்தார். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கிருதுமால் நதி சாக்கடைக்குள் மூழ்கி இறந்த கிடந்துள்ளார். உடலை கைப்பற்றி திடீர் நகர் போலீசார் இவர் எப்படி சாக்கடைக்குள் விழுந்து இறந்தார் ? என்பது குறித்து இன்று விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!