News January 2, 2025

ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

image

மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ரோந்து சென்றபோது வாளுடன் பதுங்கி இருந் விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த பழனிக்குமார் (32)என்பவரை கைது செய்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் யாரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 11, 2025

BREAKING: தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

image

மதுரையில் நடைபெறும் தவெக 2 ஆவது மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். காவல்துறை சார்பாக எழுப்பப்பட்ட 42 கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில், மாநாட்டிற்கு காவல்துறை சார்பில், பாதுகாப்பு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருப்பதாக ஆனந்த் அறிவித்துள்ளார்.

News August 11, 2025

மதுரை பெண்களே டவுன்லோடு பண்ணிக்கோங்க..!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும்.<<-1>> இங்க கிளிக் <<>>பண்ணி செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 11, 2025

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி

image

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13 ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை நீதி மன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆடு கோழி பலியிட்டு கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உள்ளதா எனவும் கேள்வி எழுப்பபட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை தரப்பில் வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!