News January 2, 2025

ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

image

மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ரோந்து சென்றபோது வாளுடன் பதுங்கி இருந் விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த பழனிக்குமார் (32)என்பவரை கைது செய்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் யாரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 24, 2025

மதுரையில் வைரலான புதிய சாலை.!

image

மதுரை காமராஜர் சாலையில் சொகுசுகார் நிறுத்திய இடத்தை தவிர்த்து, சுற்றிலும் தார் சாலை அமைத்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலங்கார் திரையரங்கம் அருகே நேற்று இரவு சாலை பணி நடைபெற்றுள்ளது. நீண்ட நேரம் காரை எடுக்காத நிலையில் மீதமுள்ள இடங்களில் மட்டும் சாலை பணி நடந்துள்ளது. இதனால் பாதியில் விடப்பட்ட சாலை பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 24, 2025

மதுரையில் வைரலான புதிய சாலை.!

image

மதுரை காமராஜர் சாலையில் சொகுசுகார் நிறுத்திய இடத்தை தவிர்த்து, சுற்றிலும் தார் சாலை அமைத்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலங்கார் திரையரங்கம் அருகே நேற்று இரவு சாலை பணி நடைபெற்றுள்ளது. நீண்ட நேரம் காரை எடுக்காத நிலையில் மீதமுள்ள இடங்களில் மட்டும் சாலை பணி நடந்துள்ளது. இதனால் பாதியில் விடப்பட்ட சாலை பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 23, 2025

மதுரை: கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

மதுரை மாவட்டம், மேலூர் வண்ணம்பாறைப்பட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் (25), நேற்று முன்தினம் மாலை மேலூருக்கு சென்றுவிட்டு, அவர் சொந்த ஊருக்கு டூவீலரில் திரும்பினார். அப்போது ஆட்டுக்குளம் செல்விநகர் அருகே எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!