News January 2, 2025
ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ரோந்து சென்றபோது வாளுடன் பதுங்கி இருந் விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த பழனிக்குமார் (32)என்பவரை கைது செய்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் யாரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 19, 2025
மதுரையில் வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை

மதுரை, எம்.கே.புரத்தில் பல வழக்குகள் உள்ள முத்துமணி போஸ்(28) நேற்று இரவு அப்பகுதி மதுபான கடையில் மது அருந்தும் போது அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறாக மாறியது. அப்போது முத்துமணி போஸ் ஒருவரை தாக்கியுள்ளார். ஆத்திரமுற்ற அந்த நபர் தனது நண்பர்களை அழைத்து வந்து முத்துமணியை ஓட ஓட விரட்டி, ஆயுதங்களால் தாக்கியும் தலையில் கல்லை போட்டும் கொலை செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 19, 2025
மதுரையில் ஓட்டு; வேறு நகரத்தில் வேலை – SIR சமர்ப்பிபது எப்படி?

மதுரை: குடும்பத்தில் ஒரு வாக்காளர் வெளிநாடு, வேறு நகரம், மாநிலத்தில் பணிபுரிந்தாலோ, சம்பந்தப்பட்ட வாக்காளரின் கணக்கெடுப்பு படிவத்தை குடும்பத்தின் வயது வந்த ஒருவரிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் மேற்குறிப்பிட்ட வாக்காளரின் விவரங்களை கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பலாம். வாக்காளரின் சார்பாக கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். SHARE IT.
News November 19, 2025
மதுரையில் உணவுத் திருவிழா; துணை முதல்வர் வருகை

மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த நவ.22 முதல் டிச.3 வரை சரஸ் மேளா எனும் கண்காட்சி நடக்க உள்ளது. உணவுத் திருவிழாவும் நடக்கிறது. இதில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்க உள்ளார். மதுரை, தஞ்சாவூர் பொம்மைகள், கடலோரப் பொருட்கள் உணவு வகைகள் காட்சிப்படுத்தப்படும். *ஷேர்


