News January 2, 2025

ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

image

மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ரோந்து சென்றபோது வாளுடன் பதுங்கி இருந் விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த பழனிக்குமார் (32)என்பவரை கைது செய்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் யாரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 12, 2025

மதுரையில் லாரி மோதி சிறுவன் பலி

image

மதுரை சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த முருகன் இவரது மகன் சங்கர் பாண்டி அனுப்பானடி தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சங்கர் பாண்டி சிந்தாமணி போலீஸ் சோதனை சாவடி பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார், அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

News November 12, 2025

மதுரை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

மதுரை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்<>கு கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

மதுரை: குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை தற்கொலை

image

மதுரை பாலமேடு தேவசேரி பாண்டி, நத்தம் ஜெயப்பிரியாவுடன் 4 ஆண்டுக்கு முன் திருமணமானது. மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வது வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாண்டி தனது 2 வயது பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கொடுத்தார், மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சையில் உள்ளது. நேற்று காலை தோட்டத்தில் பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

error: Content is protected !!