News January 2, 2025
ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ரோந்து சென்றபோது வாளுடன் பதுங்கி இருந் விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த பழனிக்குமார் (32)என்பவரை கைது செய்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் யாரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 29, 2025
ரோட்டில் கிடந்த ரூ.17.50 லட்சம் ஒப்படைப்பு

மதுரை ரோட்டில் கிடந்த ரூ.17.50 லட்ச பணத்தை பழைய பேட்டரிகளை வாங்கி விற்கும் மகேஷ் என்பவர் அந்த பணத்திற்கு உரிமை கோரினார். வசூல் பணத்தை ஆட்டோவில் கொண்டு சென்றபோது தவறி விழுந்ததாக கூறி, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். ஆவணங்கள் சரியாக இருந்தால் அப்பணத்தை வருமான வரித்துறையினர் அவரிடம் ஒப்படைப்பர் என போலீசார் தெரிவித்தனர்.
News October 29, 2025
மதுரை: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

மதுரையில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
மதுரயைில் இன்று, நாளை போக்குவரத்து மாற்றம்

தேவர் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு எம்.எம்., லாட்ஜ் சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு, மீனாட்சி கல்லுாரி தரைப்பாலம் சந்திப்பு ஆகிய சாலைகளில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்கு செல்ல அனுமதி இல்லை. ஆம்புலன்ஸ் வாகனங்கள் தத்தனேரி மெயின் ரோடு, தமுக்கம், வள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து வரக்கூடிய ஆம்புலன்ஸ்கள் வழக்கமான வழியிலேயே செல்லலாம்.


