News August 9, 2024
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பாஜக பிரமுகருக்கு சம்மன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பால் கனகராஜ் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரனுக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
Similar News
News November 12, 2025
திருவள்ளூர் காவல் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் இன்று (12.11.2025) பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அறிந்ததுடன், தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் இதில் பயனடைந்தனர்.
News November 12, 2025
திருவள்ளூர்: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இந்தியா முழுவதும் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<
News November 12, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் வரும் நவ.14ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


