News August 9, 2024
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பாஜக பிரமுகருக்கு சம்மன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பால் கனகராஜ் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரனுக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
Similar News
News September 16, 2025
விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட காவல் ஆணையர்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்
நோக்கில் நடிகர் பாஸ்கர் நடித்துள்ள “நில் கவனி நேசி” என்னும் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த குறும்படத்தை ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் வெளியிட்டார்.
போக்குவரத்து விதிகள் சம்பந்தமாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது
News September 16, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 16, 2025
மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு வங்கிக் கடன்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மு.பிரதாப் மற்றும் திருவள்ளுர் சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன், ஆகியோர் 15757 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினர். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.