News August 9, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பாஜக பிரமுகருக்கு சம்மன்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பால் கனகராஜ் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரனுக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

Similar News

News November 24, 2025

கார்த்திகை தீபம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிச.02, 03 அன்று அதிநவீன சொகுசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து 160 குளிர்சாதன மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை, படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் 03 மற்றும் 04 டிசம்பர் 2025 அன்று இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் TNSTC official app மூலம் முன்பதிவு செய்யலாம்.

News November 24, 2025

சென்னையில் ரூ.50கோடி ஜிஎஸ்டி முறைகேடு

image

சென்னையில் ரூ.50 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டறியப்பட்டது என வடசென்னை ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 12 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு ஒருவரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், 90 போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் 196 சிம் கார்ட் கவர்கள் மற்றும் சிம் கார்டுகள், 42 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News November 24, 2025

JUST IN: சென்னையில் சார்பதிவாளர் அதிரடி கைது!

image

சென்னையில் போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் ஜாபர் சாதிக்கை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய போது போலியாக நிலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே ஜாபர் சாதிக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது.

error: Content is protected !!