News August 26, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிக்கு நெஞ்சுவலி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி ரவுடி திருமலைக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.

Similar News

News November 26, 2025

திருத்தணி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

image

திருத்தணி அருகே தெக்ளூர் கிராமத்தில், கடந்த மே.10ஆம் தேதி தேவாலயம் சென்று குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஜனா (21) பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ற போது பெண்ணின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஜனா தப்பி ஓடினார். புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜனாவை நேற்று (நவ.25) கைது செய்தனர்.

News November 26, 2025

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு ஹெல்ப் டெஸ்க், கும்மிடிபூண்டி ரயில் நிலையத்திற்கு மேற்பார்வையாளர் பணியிடம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை https://tiruvallur.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 044-27665595 என்ற எண்ணையும், மேலே உள்ளதை படித்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

News November 26, 2025

திருவள்ளூர்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT

error: Content is protected !!