News August 26, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிக்கு நெஞ்சுவலி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி ரவுடி திருமலைக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.
Similar News
News December 5, 2025
சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்?

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 10.40 லட்சம் பேர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 90 ஆயிரம் பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 88 ஆயிரம் பேரும், கொளத்தூர் தொகுதியில் 73 ஆயிரம் பேரும், சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் 83 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக திரு.வி.க.நகர் தொகுதியில் 32 ஆயிரம் பேரும் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 5, 2025
சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.
News December 5, 2025
சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.


