News August 26, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிக்கு நெஞ்சுவலி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி ரவுடி திருமலைக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.

Similar News

News December 5, 2025

சென்னை: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <>க்ளிக் <<>>செய்து (டிச.8)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

சென்னையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News December 5, 2025

BREAKING: சென்னையில் போலி மருத்துவர் கைது!

image

சென்னை அண்ணா நகரில் பாத்தாவது கூட தேர்ச்சி பெறாமல் SRS ஆயுர்வேதா மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலத்தைச் சேர்ந்த ரவிக்கு தவறான சிகிச்சை அளித்த நிலையில் டிஎம்ஸ், ஆயுர்வேதா ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் போலி மருத்துவர் வெங்கடேஸ்வரனை காவல்துறையினர் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!