News August 7, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: காங்கிரஸ் நிர்வாகி கைது

பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும், வழக்கறிஞராகவும் உள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5 ஆம் தேதி, தனது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடையோரை அஸ்வத்தாமன் சந்தித்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 5, 2025
இந்தாண்டில் மக்கள் கூகுளில் அதிகம் தேடியவை (PHOTOS)

கூகுள், 2025-ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், IPL முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, வேறு எவையெல்லாம் அதிகம் தேடப்பட்டுள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கூகுளில், நீங்கள் அதிகம் தேடியது எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE பண்ணுங்க.
News December 5, 2025
ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான (₹300) முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படும். டிக்கெட்களை பெற <
News December 5, 2025
பார்லிமென்ட்டை முடக்கிய தமிழக MP-க்கள்!

இன்று லோக்சபா தொடங்கியது முதலே <<18473828>>திமுக MP-க்கள்<<>> திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச வேண்டுமென அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ‘நீதி வேண்டும்’ என தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ராஜ்யசபாவிலும் அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி MP-க்கள், வெளிநடப்பு செய்தனர்.


