News August 7, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: காங்கிரஸ் நிர்வாகி கைது

image

பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும், வழக்கறிஞராகவும் உள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5 ஆம் தேதி, தனது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடையோரை அஸ்வத்தாமன் சந்தித்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 26, 2025

சற்றுமுன்.. விலை மொத்தம் ₹5,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளது. நேற்று(நவ.25) கிலோவுக்கு ₹3,000, இன்று ₹2,000 என மொத்தம் ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால், 1 கிராம் ₹176-க்கும், கிலோ ₹1,76,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கடந்த 2 நாள்களில் மட்டும் 3% உயர்ந்து 1 அவுன்ஸ் 52.75 டாலருக்கு விற்பனையாகிறது. இதனால், வரும் நாள்களில் இந்தியாவில் வெள்ளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

News November 26, 2025

லாபத்துக்காக கட்சி ஆரம்பித்த விஜய்: தமிழருவி மணியன்

image

மக்களுக்கான ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், வீடு, வாகனம் என ஒப்பேறாத திட்டங்களை விஜய் விளம்பரப்படுத்துவதாக தமிழருவி மணியன் விமர்சித்துள்ளார். விஜய் தன்னலமற்ற மக்கள் சேவைக்காக கட்சி ஆரம்பித்தவர் அல்ல எனவும், தனலாபம் ஈட்ட கட்சியை ஆரம்பித்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ்வை அருகில் வைத்து கட்சி நடத்துவதே இதற்கு சாட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

News November 26, 2025

கோச் சொல்லத்தான் முடியும், வீரர்கள்தான் விளையாடணும்..

image

இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பல தரப்பில் இருந்தும் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் கோச்சை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என கம்பீருக்கு ஆதரவாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அறிவுரை வழங்குவதே கோச்சின் வேலை, வீரர்கள் தான் விளையாட வேண்டும் என கூறிய அவர், கம்பீர் தனது வேலையை சரியாகவே செய்கிறார் என குறிப்பிட்டார்.

error: Content is protected !!