News August 7, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: காங்கிரஸ் நிர்வாகி கைது

பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும், வழக்கறிஞராகவும் உள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5 ஆம் தேதி, தனது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடையோரை அஸ்வத்தாமன் சந்தித்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 27, 2025
உள்ளூர் போட்டிகளில் Ro-Ko? கில் விளக்கம்

2027 உலகக் கோப்பைக்கு ரோஹித், கோலி தயாராவதற்காக, இருவரையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வைக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ODI கேப்டன் கில்லிடம் கேட்டபோது, இது பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். அதேநேரம், தெ.ஆப்பிரிக்கா, நியூசி., தொடருக்கு இடையே சிறிது இடைவெளி உள்ளதால், அப்போது இதுகுறித்து முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
விஜய் கட்சியில் இருந்து விலகல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறவிருக்கிறார். இது மாற்றுக்கட்சியினரை மட்டுமல்ல, சொந்த கட்சியினரையும் அதிருப்தியடைய செய்துள்ளது. நேற்றிலிருந்து இந்த விவகாரம் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், கரூரை சேர்ந்த தவெக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
News October 27, 2025
ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்?

‘ஜெயிலர் 2’ பட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்திலிருந்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கும் நிலையில், வில்லனாக மிதுன் சக்கரவர்த்தி நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் வித்யா பாலன் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். முன்னதாக, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் கேமியோவாக நடித்திருந்த வித்யா, இதில் முழு படத்திலும் பயணிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹுக்கும்..


