News August 7, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: காங்கிரஸ் நிர்வாகி கைது

பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும், வழக்கறிஞராகவும் உள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஜூலை மாதம் 5 ஆம் தேதி, தனது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். அதில் தொடர்புடையோரை அஸ்வத்தாமன் சந்தித்த புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 23, 2025
சபரிமலை தங்கம் திருட்டு: இந்த நடிகர் சாட்சியா?

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி, <<18345270>>பத்மகுமார் <<>>உள்பட பலர் கைது செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் ஜெயராம் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உன்னிகிருஷ்ணன் நடத்திய ஒரு சடங்கில் அவர் கலந்துகொண்டதே இதற்கு காரணம். ஜெயராமின் வாக்குமூலத்தை பதிவு செய்ய SIT திட்டமிட்டுள்ளது.
News November 23, 2025
நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம்: CM ஸ்டாலின்

துபாய் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் <<18364839>>நமன்ஷ்<<>> சியாலின் உடல் கோவைக்கு கொண்டு வரப்பட்ட காட்சிகளை பார்த்து கண்கலங்கியதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்கு தமிழ்நாடு தனது அஞ்சலியை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் CM கூறியுள்ளார்.
News November 23, 2025
காதுகேளாதோர் ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை சாதனை

டோக்கியோ காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை மஹித் சந்து, 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவர் பெறும் 4-வது பதக்கம் இது. ஏற்கெனவே, கலப்பு 10மீ பிரிவில் ஒரு தங்கம், 2 தனிநபர் பிரிவுகளில் 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.


