News August 9, 2024
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மிரட்டல்: ஒருவர் கைது

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்த்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து விடுவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மிரட்டல் தொடர்பாக கடலூரைச் சேர்ந்த பள்ளித் தாளாளர் அருண்ராஜை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
பொன்னேரி: முடிதிருத்தம் தொழிலார்கள் முற்றுகை

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் அடாவடி வசூல் செய்வதாகவும், தொழில் வரி வசூல் செய்வதில் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்களை மிரட்டுவதாகவும் கூறி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(டிச்.12) 50க்கும் மேற்பட்டோர் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
News December 12, 2025
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.13) மற்றும் நாளை மறுநாள் (டிச.14) ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் குறித்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
திருவள்ளூர்: மாணவிகள் முன்பு ஆபாச செயல்!

ஆவடி: அயப்பாக்கம் மாநகர பஸ் தடம் எண் 73C அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் நோக்கி சென்றது ICF காலனியில் கஞ்சா போதையில் பஸ்சில் அரை நிர்வாணமாக ஏறிய வாலிபர் பஸ்சில் இருந்த பள்ளி மாணவிகள் முன்பு நடனம் ஆடியதுடன், ஆபாச மாக பேசினார் இதனால் சக பயணிகள், டிரைவர், கண்டக்டர் அதிர்ச்சி அடைந்தனர். அம்பத்தூர் காவல் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி, போதை வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்து வருகின்றனர்.


