News August 9, 2024

ஆமை வேகத்தில் புதிய பேருந்து நிலையம்

image

உடுமலையில் கோவை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த சில வருடங்களுக்கு முன் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. இந்நிலையில் பல வருடங்கள் ஆகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே பணிகளை விரைந்து முடித்து புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டை கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News

News December 6, 2025

திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

திருப்பூர் பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வுபெற்ற தபால்துறை அலுவலரான இவர், கோவை – திருச்சி சாலை, செட்டிபாளையம் பிரிவு அருகே டூ வீலரில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் சென்ற வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 6, 2025

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.06) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம் கிழக்கு, இடுவாய் கிழக்கு, வஞ்சிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 6, 2025

இரவு ரோந்து போலீசார் பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (5.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, குடிமங்கலம், செய்யூர், ஊதியூர், வெள்ளகோவில் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!