News April 16, 2025
ஆன்லைன் முதலீடு – ரூபாய் 11 லட்சம் மோசடி

வில்லியனூரை சேர்ந்த இஸ்மத் நாச்சியார் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இஸ்மத் ட பல்வேறு தவணைகளாக ரூ.11,42,736 முதலீடு செய்து, அவருக்கு கொடுத்த பணிகளை செய்து முடித்து ஏமாந்தார் அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்
Similar News
News November 26, 2025
புதுவை: லோன் பெற்று தருவதாக பணம் மோசடி – இளைஞர்கள் கைது

புதுவை, கொடாத்துாரைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பி அவர் தன்னுடைய வங்கி விவரங்களை வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். பின், மர்மநபர் ரூ.54 ஆயிரம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் தான் லோன் பெறமுடியும் என கூறவே அவர் பணத்தை அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகாரின்படி சென்னையைச் சேர்ந்த வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.
News November 26, 2025
புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
புதுவை: தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

கோட்டிச்சேரியை சேர்ந்தவர் ராணி(68). இவரது கணவர் நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், இவர்களது 4 மகன்களும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனியே வசித்து வரும் ராணி, தனக்கு வாழப் பிடிக்கவில்லையென கூறி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


