News June 26, 2024
ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 914ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 181 கிராம் தங்கம், 1465 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
Similar News
News November 14, 2025
தி.மலை: கலெக்டர் ஆபீசில் தீக்குளித்தவர் பலி!

தி.மலை, கலசப்பாக்கம் அடுத்த கீழ்தாமரைப்பாக்கத்தில் குமார் என்பவருக்கும் அவரது சகோதரருக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் குமாரும் அவரது மனைவி பூங்கொடியும் தீக்குளித்தனர். 45 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி, சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.13) உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News November 14, 2025
தி.மலை: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News November 14, 2025
தி.மலை: மாவட்ட ஆட்சியர் பெயரில் மோசடி?

சமூக வலைதளங்கள் மூலம் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி உதவி கேட்பது போன்று சைபர் கிரைம் மோசடிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜ் பெயரை பயன்படுத்தி உதவி கேட்பதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்துள்ளது. மோசடியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களும், அலுவலர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.


