News June 26, 2024
ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 914ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 181 கிராம் தங்கம், 1465 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
Similar News
News November 1, 2025
திருவண்ணாமலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (31.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
திருவண்ணாமலை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட அட்டவணை

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நவம்பர் மாத மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் கோட்ட அளவில் நடைபெற உள்ளன. வந்தவாசி – நவ.4ம் தேதி, செங்கம் நவ.6, போளுர் நவ.11, சேத்துப்பட்டு நவ.13, செய்யாறு நவ.18, திருவண்ணாமலை கிழக்கு நவ.20, ஆரணி நவ.25 , திருவண்ணாமலை மேற்கு நவ.27-ல் கூட்டம் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் காலை 11 மணியளவில் நடைபெறும் என மின்துறை தெரிவித்துள்ளது.
News October 31, 2025
தி.மலை: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள் <


