News September 13, 2024

ஆத்தூர் போலீஸ் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த நபரிடமிருந்து பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகியோரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

தூத்துக்குடி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News November 7, 2025

தூத்துக்குடி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

தூத்துக்குடி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

News November 7, 2025

BREAKING: திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் ரத்து

image

திருச்செந்தூரிலிருந்து பாலக்காடு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது தினமும் இயங்கி வருகிறது. இந்த ரயிலானது கோவில்பட்டி யார்டில் நடைபெறும் இன்ஜினியரிங் பணி காரணமாக இன்று(நவ.7) மட்டும் விருதுநகரில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் இன்று திருச்செந்தூரில் இருந்து செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!