News January 23, 2025
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் கால்வாய்க்கு உட்பட்ட பாசன நிலங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை 196 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் புகழூர், மண்மங்கலம் தாலுகாவில் உள்ள 19 ஆயிரத்து 480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
கரூர்: மின்வாரிய குறைதீர் நாள் கூட்டம்

கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில், வரும் 14ம் தேதி குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வரும் 21ம் தேதி கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும், வரும் 28ம் தேதி மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் நடக்கிறது. இந்த கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 11, 2025
கரூர் மாவட்ட முட்டை விலை

கரூர் மாவட்டம் பகுதிகளில் முட்டைகள் விலை: கோழி முட்டை ரூ.4.65 நாட்டுக்கோழி ரூ.11.00 – ரூ.14.00 காடை முட்டை ரூ.7.00 வாத்து முட்டை ரூ.12.00 – ரூ.15.00 நேற்று நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ, 290 ரூபாய்க்கும், கறிக்கோழி ஒரு கிலோ, 250 ரூபாய்க்கும்
விற்பனை செய்யப்பட்டது.
News August 11, 2025
கரூர்: வெளிநாட்டு வேலை APPLY NOW!

கரூர் மக்களே பூட்டான் சுகாதார மருத்துவமனையில் காலியாக உள்ள 100 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.sc Nursing டிகிரி படித்திருக்க வேண்டும். இதற்கு, மாதம் ரூ.65,246 முதல் 86,046 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், இந்த <