News January 23, 2025
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் கால்வாய்க்கு உட்பட்ட பாசன நிலங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை 196 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் புகழூர், மண்மங்கலம் தாலுகாவில் உள்ள 19 ஆயிரத்து 480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் ஆரம்பத் தொகையாக 15,000 முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் (www.tahdco.com) இந்த இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்கள். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News October 18, 2025
கரூர்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

கரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
கரூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்து உழவன் செயலி வாயலாக Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!