News January 23, 2025
ஆத்துப்பாளையம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் கால்வாய்க்கு உட்பட்ட பாசன நிலங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை 196 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் புகழூர், மண்மங்கலம் தாலுகாவில் உள்ள 19 ஆயிரத்து 480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
கரூரில் வசமாக சிக்கிய இளைஞர்!

கரூர் மாவட்டம் காளியப்பனூர் தரிசு காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தாந்தோணிமலை போலீசார் மது விற்ற திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News December 6, 2025
கரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 6, 2025
கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கரூர் ரயில் நிலையத்தில் நேற்று (டிசம்பர் 5) பாதுகாப்புப் படையினரும் இருப்புப்பாதை போலீசாரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பயணிகள் காத்திருக்கும் அறைகள், டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ரயில் நிலைய வளாகத்தின் பிற முக்கிய இடங்களிலும் சோதனை நடத்தினர்.


