News January 23, 2025

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

image

கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் கால்வாய்க்கு உட்பட்ட பாசன நிலங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை 196 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் புகழூர், மண்மங்கலம் தாலுகாவில் உள்ள 19 ஆயிரத்து 480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 13, 2025

கரூர் அருகே விபத்து ஒருவர் பலி

image

கரூர் மாவட்டம் புகலூர் சின்ன வாங்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 29. இவர் நேற்று தனது பைக்கில் தென்னிலை பால்வார்பட்டி பிரிவு அருகே சென்ற போது திருமாவளவன் ஓட்டி வந்த லாரி மோதியதில் முத்துக்கிருஷ்ணன் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். அவரின் மனைவி அகல்யா புகாரில் தென்னிலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News November 13, 2025

கரூர்: குரூப் 2, 2A- முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

image

கரூர் மாவட்டம், வெண்ணமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2A- முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற (20.11.2025) அன்று தொடங்க உள்ளது. இதில் அனுபவ வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. விவரங்களுக்கு 04324-223555, 6383050010 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News November 13, 2025

கரூர்: SIR கணக்கீட்டு படிவம் குறித்து சந்தேகமா?

image

கரூரில் SIR கணக்கீட்டு படிவம் குறித்து சந்தேகம் இருந்தால், உங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ECINET இணையதளத்தில் பதிவு செய்தபின் “Book a Call with BLO” தேர்வு செய்து, கைபேசி எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை வழங்கி பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு உதவி எண்: 1950, வாட்ஸ்அப்: 9444123456 தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!