News May 17, 2024

ஆதிதிராவிடர் பள்ளி மாணவனுக்கு ஆட்சியர் பரிசு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், +2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கான “என் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று (17.05.2024) நடைபெற்றது. இதில் +2 தேர்வில் 563 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவன் கணேஷ்குமார்-க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பாராட்டி கேடயம் வழங்கினார்.

Similar News

News November 23, 2025

காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 24 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார், எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 23, 2025

காஞ்சி மக்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்

image

சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கல்லூரியில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். QR குறியீடு உள்ள அனுமதி அட்டை பெற்ற 2,000 பேர் மட்டுமே இதில் அனுமதிக்கப்படுவர். இதற்காகக் கல்லூரியைச் சுற்றி 1 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள், பெண்கள் & விவசாயிகளுடன் விஜய் கலந்துரையாட உள்ளார்.

News November 23, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!